தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

மக்கள் தொடர்பு முகாம்


  • பொதுமக்களின் குறைகள் உடனடியாக தீர்க்கப்படவேண்டும் என்ற குறிக்கோளுடன் , மக்கள் தொடர்பு முகாம் திட்டம் 1969-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது புதன் கிழமை நடத்தப்படுகிறது.
  • மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஒட்டுமொத்த மாவட்ட நிருவாகமும் ஒரு குழுவாக சென்று மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல் இதர அரசு சேவைகளும் வழங்கப்பட்டு வருவதே இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும்.
    இம்முகாம்களை மேலும் பயனுள்ளதாக செயல்படுத்த:
    1) தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்),
    2) வருவாய் கோட்ட அலுவலர்,
    3) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும்
    4) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர்
    ஆகியோர் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை, மாதத்தின் நான்கவது புதன்கிழமை செலுத்தப்படுகிறது.
  • பெறப்பட்ட மனுக்கள் தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டு, அதன் மீதான இறுதி ஆணைகள் மக்கள் தொடர்பு முகாம் நாளன்று பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. அம்முகாம்களிலேயே முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் ஆணைகள் மற்றும் இதர அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது.

Untitled Document